பைக்கில் செல்போன் திருடிய வாலிபர் கைது

 

தூத்துக்குடி, பிப்.12: தூத்துக்குடியில் பைக்கில் வைத்துசென்ற செல்போனை திருடிச் சென்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மீட்டனர். தூத்துக்குடி கிருபைநகரை சேர்ந்த ஆல்வின் ஞானபிரகாசம் மகன் பிரின்ஸ் ஸ்டாலின் (42). இவர் கடந்த 9ம்தேதி தனது பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் ரூ.21 ஆயிரம் மதிப்பிலான தனது செல்போனை வைத்ததை மறந்தநிலையில் வீட்டின் முன்பாக பைக்கை நிறுத்திச்சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக்கில் இருந்த அவரது செல்போன் திருடு போனது.

இதுகுறித்து பிரின்ஸ் ஸ்டாலின் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன்ராஜ் (20) என்பவர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை தென்பாகம் எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை மீட்டனர்.

The post பைக்கில் செல்போன் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: