பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது

நெல்லை: பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து உல்லாசத்துக்கு அழைத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இப்புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை எஸ்.பி. சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வள்ளியூரைச் சேர்ந்த முத்துக்குமார் (29) என்பவர் சமூக வலைத்தளங்களில் போலி ஐடிக்களை உருவாக்கி இத்தகைய செயல்களில் இறங்கியது தெரிய வந்தது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பெண்கள் சார்ந்த புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, அவற்றை ஆபாசமாக அவர்களுக்கே அனுப்பி தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும், பணம் தருமாறும் மிரட்டி வந்ததும் அம்பலமானது.இந்நிலையில் தலைமறைவான முத்துக்குமார், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே அந்தியூர் கிராமத்தில் பதுங்கியிருந்தது சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்துசென்ற போலீசார், முத்துக்குமாரை கைதுசெய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முத்துக்குமார், மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்….

The post பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: