பாடாலூர் காவல் நிலையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

 

பாடாலூர், செப். 17: பாடாலூர் காவல் நிலையத்தில் சமூக நீதி நாளையொட்டி இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் காவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பெரியார் பிறந்த நாளான செப். 17ஐ சமூக நீதி நாளாக கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் நேற்றே கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் காவல் நிலையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் பிரபுஉறுதி மொழியை வாசிக்க அனைத்து எஸ்ஐகள்,காவ லர்கள் உறுதிமொழி ஏற் றுக்கொண்டனர். இந்நிகழ்வில் எஸ்ஐகள் கமலி, சகாயசெல்வம், சிறப்பு எஸ்எஸ்ஐ செந்தாமரைக்கண்ணன்,சுகன்யா, தலைமை காவ லர்கள் பெனோ, உண்ணா மலை, மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பாடாலூர் காவல் நிலையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: