குஜராத் மாநிலம் உனா கிராமத்தில் பசு காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளான தலித்துகள் புத்த மதத்திற்கு மாறியதற்கு பாரதிய ஜனதா அரசின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். குஜராத்தில் மோடா சமாதியா கிராமத்தில் சுமார் 300 தலித்துகள் புத்த மதத்திற்கு மாறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் புத்த மத குரு மத ரீதியான சடங்குகளை நடத்தி தங்கள் மதத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டார். அப்போது மதம் மற்றும் சாதி ரீதியான வேறுபாடுகளை தொடரமாட்டோம் என்று அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.