நடுங்க வைக்கும் குளிர் கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சாரல் மழை, கடும் குளிர் என காலநிலை மாறி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகலில் தொடரும் மழையால், சுற்றி பார்க்க வழியின்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. பிற்பகலில், கொடைக்கானலில் வழக்கத்திற்கு மாறாக கடும் குளிர் நிலவி வருகிறது. வார விடுமுறையையொட்டி மழை, குளிரை பொருட்படுத்தாமல் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் நேற்று குவிந்தனர். ஆனால் மழை, கிடுகிடுக்க வைக்கும் குளிர் காரணமாக, கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சென்று ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். தற்போது கடும் குளிர் நிலவி வருவதால், கொடைக்கானலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது….

The post நடுங்க வைக்கும் குளிர் கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: