தேனி நியூட்ரினோ திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது: திட்ட ஆய்வு இயக்குநர் விவேக் தத்தா பேட்டி

தேனி: தேனி நியூட்ரினோ திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது என தேனியில் நியூட்ரினோ திட்ட ஆய்வு இயக்குநர் விவேக் தத்தா பேட்டியளித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்தால் கதர்வீச்சு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறினார். நியூட்ரினோ திட்டத்திற்கான கருவிகள் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்திய மாணவர்கள் கருவிகளை வடிவமைத்துள்ளனர் எனவும், பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் கருவிகள் உள்ளதாகவும் விவேக் தத்தா கூறினார். இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கருவிகளை நேரடியாக காணலாம் எனவும் கூறினார். நியூட்ரினோ கதிர்களின் தன்மையை ஆய்வு செய்யவே இந்த திட்டம் எனவும் தெரிவித்தார். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: