தீ விபத்தில் வீடுகள் சேதம்

 

தேனி, ஜூலை 6: தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியான வாழையாத்துப்பட்டியில் ரயில்வே ஸ்டேசன் தெருவில் குடியிருப்பவர்கள் பவுன்ராஜ். மூதாட்டி முனியம்மாள். இவ்விருவரும் கூலித்தொழிலாளிகளாக வேலைபார்த்து வருகின்றனர். இவ்விருவரின் வீடுகளும் தகரம் மற்றும் கூரையால் வேயப்பட்டிருந்தது.

நேற்று காலை பவுன்ராஜ் மற்றும் முனியம்மாள் ஆகியோர் கூலி வேலைக்கு சென்று விட்டனர். பவுன்ராஜ் பிள்ளைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அருகருகே உள்ள இவ்விருவரின் வீடுகளிலும் திடீரென தீப்பிடித்து எரிந்து தீக்கிரையாகின. இது குறித்து தகவலறிந்த பேரூராட்சி சேர்மன் கவியரசு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

The post தீ விபத்தில் வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: