தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமமின்றி பட்டாசு விற்றால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமமின்றி பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற  ஆவணங்களுடன் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு விண்ணப்பிக்கும்போது கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான ப்ளு பிரிண்ட் வரைபடம், 6 நகல்கள், கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500ஐ அரசு கணக்கில் செலுத்தியதற்கான அசல் சலான், இருப்பிடத்திற்கான ஆதாரம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வரி ரசீது, புகைப்படம் 2 பாஸ்போர்ட் சைஸ் வைத்திருக்க வேண்டும்.வழிமுறைகளை கடைபிடித்து தற்காலிக பட்டாசு உரிமம் வேண்டுவோர் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவு பெற்றவுடன், ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடனும், தற்காலிக உரிமத்தின் ஆணையினை அக்டோபர் 15ம் தேதியிலிருந்து இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம். மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமமின்றி பட்டாசு விற்றால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: