திருப்பதியில் ஒரே நாளில் ரூ.5.38 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் 64 ஆயிரத்து 162 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 23 ஆயிரத்து 709 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.5.38 கோடி காணிக்கையாக கிடைத்தது. கூட்டம் அலைமோதுவதால், சுமார் 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். …

The post திருப்பதியில் ஒரே நாளில் ரூ.5.38 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: