திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை சார்பில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு வரவேற்பு

 

திருச்சி, ஜூலை 20: திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வருகை தந்தார். அதனை முன்னிட்டு வடக்கு மாவட்ட தலைவர் கலை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி மாநகர் முழுவதும் செல்வப்பெருந்தகையை வரவேற்று மாவட்ட தலைவர் கலை சார்பில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கட்சிக் கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு செண்டை மேளம் மற்றும் பறை மேளம், மங்கள வாத்திய இசை என வரவேற்பில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தடபுடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் மற்றும் செல்வ பெருந்தகை படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பனியன் வழங்கப்பட்டிருந்தது.செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகளும்,தொண்டர்களும் பெரும் உற்சாகம் அடைந்தனர். செல்வப் பெருந்தகை மற்றும் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு இருவருக்கும் காங்கிரஸ் கட்சியின் கலரில் தயார் செய்யப்பட்ட மலர் மாலையை திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கலை அணிவித்தார். அப்போது இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் உடனிருந்தார். கூட்ட முடிவில் அனைவருக்கும் அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

The post திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை சார்பில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: