திண்டுக்கல் தெற்கு அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல், செப். 19: திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி மின்சார வாரியம் செயற்பொறியாளர் தெற்கு அலுவலகத்தில் இன்று மின் பயனீட்டாளர்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது என செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் மின்சார வாரியம் செயற்பொறியாளர் தெற்கு அலுவலகத்தில் இன்று (செப்.19ம் தேதி, வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் பயனீட்டாளர்களின் குறைதீக்கும் முகாம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிய உள்ளார். இந்த முகாமில் திண்டுக்கல் தெற்கு கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களது மின்வாரியம் சார்ந்த அனைத்து குறைகளையும் அதிகாரியிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் தெற்கு அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: