திண்டுக்கல்லில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஏப். 4: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அன்பரசு தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர், பாலமுருகன் துணை தலைவர்கள் முகமது ஷர்புதீன், சுப்பையா, மாவட்ட இணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், மலர்செல்வி முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில், பயிர் கடன்கள் வழங்கப்படும் போது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் உறுப்பினர்களுக்கு அதிகளவில் கடன் கொடுக்கும் விதிமுறைகளை அதிகாரிகளால் வாய்மொழியாக தளர்த்தப்பட்டு குறியீட்டை நிர்பந்திக்கப்படுகிறது.

இவ்வாறு கொடுத்த கடன்களை ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் விதிமீறல்கள் என கூறி சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட வேண்டும். கடன் தள்ளுபடிக்கு அமைக்கப்பட்ட பயிர் கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் அனைத்திற்கும் ஒரே தொகையை வட்டி இழப்பின்றி வழங்கப்பட்டுள்ளது. சங்கங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியில் தீர்வு காணப்பட வேண்டும்.

தவணை தவறிய நகை நகைக்கடன் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்டுள்ள இழப்பு தொகையை சங்க செயலாளர் மற்றும் பணியாளர்கள் பொறுப்பாக்கப்பட்டு ஓய்வு கால நிதியை நிறுத்தி வைக்கும் தவறான நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: