திண்டுக்கல்லில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் நாள் முகாம்

திண்டுக்கல், செப். 14: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்படும் என் அமைச்சர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில், திண்டுக்கல் மண்டலத்தில் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பணியாளர் நாள் நேற்று மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது. மண்டல இணை பதிவாளர் காந்தி நாதன் தலைமை வகித்தார்.

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் சுபாஷினி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு தகுதியின் அடிப்படையில் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என மண்டல இணை பதிவாளர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக துணை பதிவாளர் உஷா நந்தினி, மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ஆசைத்தம்பி, இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் நாள் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: