தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதி பலி

 

திருப்பூர், ஜூன் 9: திருப்பூர், முதல் ரயில்வே கேட் அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் திருப்பூர் முதலிபாளையம் ஹவுசிங்யூனிட் பகுதியை சேர்ந்த தொழிலாளியான முத்துக்குமாரசாமி (48) என்பதும், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு பலியானதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதி பலி appeared first on Dinakaran.

Related Stories: