இந்தியா டெல்லியில் இன்று நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! Jun 22, 2021 காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் தில்லி காவிரி தின மலர் டெல்லி: டெல்லியில் இன்று நடைபெறுவதாக இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் ஒன்றிய நீர் ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொள்ள இருந்தனர். உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான தென்மேற்கு பருவ காலத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீர் குறித்து இன்று விவாதிக்கப்பட இருந்தது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் விரைவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அறிவிப்பு குறித்தும் இக்கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டிருந்தனர். குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்துக்கு 24 டி.எம்.சி. நீரும் கர்நாடகா, மேட்டூர் அணைக்கு திறந்துவிட வேண்டிய நிலையில் இரு மாநில அணைகளிலும் உள்ள நீர் இருப்பு குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட இருந்தது. ஆனால் யு.பி.எஸ்.சி.யில் இன்று நடைபெறும் கூட்டத்தில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் கலந்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இன்றைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. … The post டெல்லியில் இன்று நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவை, மோடி, அமித்ஷா கண்டிக்காதது ஏன்?: முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி!!
கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது : திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்!!
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு போலீசார் முடிவு!!
மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒன்றிய அரசு 3 சட்டங்களை கொண்டு வருவதற்கு திட்டம்!!
பீகாரில் 13 மாவட்டங்களில் 5-வது நாளாக தொடரும் கனமழை: கடும் வெள்ளப் பெருக்கால் 13.50 லட்சம் பொதுமக்கள் பாதிப்பு
புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘குரங்கு பெடல்’ தேர்வு..!!