செல்போன் பறித்த சிறுவர்கள் கைது

அண்ணாநகர்: நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(38). இவர் நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றார். கோயம்பேடு 100 அடி சாலையில் வந்தபோது, 2 மர்ம நபர்கள் அவரிடமிருந்து செல்போனை பறித்து சென்றனர். இதைக்கண்ட கோயம்பேடு போலீசார், அவர்களை மடக்கி, பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள்  திருவேற்காடு, மதுரவாயல் பகுதிகளை சேர்ந்த 17 வயது 2 சிறுவர்கள் எனத் தெரியவந்தது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து பைக், செல்போன், பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது….

The post செல்போன் பறித்த சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: