சீல் வைத்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு

ஏழாயிரம்பண்ணை, செப்.14: வெம்பக்கோட்டை அருகே இனாம்மீனாட்சிபுரம் பகுதியில் பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையை சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.6000 மதிப்புள்ள லட்சுமி வெடி மற்றும் திரிகள் உள்ளிட்ட மருந்து பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

The post சீல் வைத்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: