சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நிகழ்ச்சி

 

சீர்காழி,ஆக.11: சீர்காழி, சுபம் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ”வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தினை நினைவு கூறும் வகையில் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக அலுவலர் சண்முகம் தலைமை வகித்தார். சீர்காழி சப்.இன்ஸ்பெக்டர் ஜெயகிருபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை புரிந்தவர்களை தமிழ் ஆசிரியர் சிவா வரவேற்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர்கள் வசந்தி மற்றும் அலெக்சாண்டர் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: