சிசிடிவி அமைத்தல் ஆலோசனை கூட்டம்

மானாமதுரை, செப்.17: கிராமங்களில் குற்றச்செயல்களை தடுக்க சிசிடிவி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மானாமதுரை அருகே மேலபசலை கிராமத்தில் நடந்தது. மானாமதுரை காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பழையனூர் போலீஸ் ஸ்டேஷன்களை சுற்றிலும் ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கால்நடை திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடக்கும்போது போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்களின் உதவி உறுதுணையாக உள்ளது. இந்நிலையில், மானாமதுரை அருகே மேலபசலை கிராமத்தில், சிசிடிவி கேமராக்கள் அமைப்பது குறித்து, டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டிய அவசியம் குறித்து அவர் பொதுமக்களிடம் விளக்கினார்.

The post சிசிடிவி அமைத்தல் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: