சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்

 

திருவில்லிபுத்தூர், ஆக.18: சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு காங்கிரஸ் கட்சி தொழிற்சங்கம் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் தம்பிபட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு நீர் மோரை வழங்கினார். வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

The post சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: