கோயில்களில் பூசாரியாக வேலை செய்து வந்த வாலிபர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

அணைக்கட்டு, ஏப். 27: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா அணைக்கட்டு கிராமம், காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்ராஜ் (26). இவரது தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இதில் அருண்ராஜ் அணைக்கட்டு பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் பூசாரியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் அவர் தங்கி இருந்த அறையில் இருந்து நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த அறையில் அருண்ராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதைப் பார்த்த அவர்கள் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த அணைக்கட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு வந்து வாலிபர் அருண்ராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து அருண்ராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில்களில் பூசாரி ஆக இருந்து வந்த வாலிபர் அருண்ராஜ் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரும் இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோயில்களில் பூசாரியாக வேலை செய்து வந்த வாலிபர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: