தொழிலாளியிடம் ₹5 ஆயிரம், செல்போன் பறித்தவர் கைது காட்பாடியில் கத்தியை காட்டி மிரட்டி

வேலூர், செப்.19: காட்பாடி தாலுகா, அகரவாரம் பழைய தெருவை சேர்ந்தவர் தமிழ்மணி(34), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை காட்பாடி வெங்கடாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ₹5 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காட்பாடி போலீசில் தமிழ்மணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்தை பறித்தது காட்பாடி காங்கேயநல்லூர் மாட தெருவை சேர்ந்த டிரைவர் சந்தோஷ்(24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹2 ஆயிரம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

The post தொழிலாளியிடம் ₹5 ஆயிரம், செல்போன் பறித்தவர் கைது காட்பாடியில் கத்தியை காட்டி மிரட்டி appeared first on Dinakaran.

Related Stories: