இந்தியா கொரோனா 3-ம் அலை; 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் எதிர்கொள்ளக்கூடும்: எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா பேட்டி Jun 19, 2021 கொரோனா 3வது அலை இந்தியா எய்ம்ஸ் ஜனாதிபதி ரன்தீப் குலேரியா தில்லி மூன்றாவது அலை நோக்கங்கள் டெல்லி: 6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை. முக கவசம் முறையாக அணிவதில்லை. அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம் என கூறினார். 6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளலாம். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரிய சற்று காலமாகலாம். ஆனால் இப்போதிருந்தே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என்று கருதுகிறேன். மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது” என கூறினார். தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள், மருத்துவர்கன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. … The post கொரோனா 3-ம் அலை; 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் எதிர்கொள்ளக்கூடும்: எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா பேட்டி appeared first on Dinakaran.
காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் பிரார்த்தனை; டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்தார்
2 ஐடி ஊழியர்கள் பலியான வழக்கில் அடுத்தடுத்த திருப்பம்; போதை சிறுவனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஜெயிலில் இருக்கு!: ஒருவன் செய்த குற்றத்தை மறைக்க வரிசையாக சிக்கிய பரிதாபம்
பலாத்காரம் செய்யப்பட்ட பணிப்பெண் கடத்தல் வழக்கு ரேவண்ணா மனைவி தலைமறைவு: விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்
நடிகர் சல்மான்கானை கொல்ல சதி ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது: பாகிஸ்தானில் இருந்து ஏகே 47 துப்பாக்கி வாங்க முயற்சித்தது அம்பலம்