கேரள ஆதிவாசி காலனியில் மாவோயிஸ்ட் நடமாட்டம்

பந்தலூர்: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 14ம் தேதி வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு 4 மாவோயிஸ்டுகள் சென்று அரசுக்கு எதிராக நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இந்நிலையில்,  வயநாடு மாவட்டம், தொண்டர் நாடு காவல் நிலைய பகுதி பன்னிப்பட்டு ஆதிவாசி காலனிக்கு 6 மாவோயிஸ்டுகள் சென்று அப்பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டில் சிறிது நேரம் இருந்ததாகவும், அதன்பின் வனப்பகுதிக்குள் சென்றதாக வனப்பகுதிக்கு தேன் எடுக்க சென்ற ஆதிவா காலனியை சேர்ந்த சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கேரளா போலீசார் ஆதிவாசி காலனிக்கு வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்….

The post கேரள ஆதிவாசி காலனியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: