குலசேகரம் அருகே ஜீப் மோதி தொழிலாளி படுகாயம்

குலசேகரம், செப்.13: குலசேகரம் அருகே நாககோடு செம்மண்காலவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (46). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி பெல்லா (45). சம்பவத்தன்று கிறிஸ்துராஜ் வேலைக்கு செல்வதற்காக பைக்கில் குலசேகரம்- மார்த்தாண்டம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோணத்துவிளாகம் பகுதியை சேர்ந்த கோணி மகன் பினாய் (24) ஜீப்பில் வேகமாக வந்து கொண்டிருந்தார். அந்த நேரம் ஜீப் எதிர்பாராதவிதமாக கிறிஸ்துராஜ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கிறிஸ்துராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பெல்லா கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குலசேகரம் அருகே ஜீப் மோதி தொழிலாளி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: