கும்பகோணம் அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

கும்பகோணம், டிச.28: கும்பகோணம் அருகே அனுமதியின்றி மது விற்ற வாலிபரை கைது செய்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் மற்றும் போலீசார் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே உள்ள ஆதனூர் சுடுகாட்டு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து சோதனை செய்ததில் அவர் எந்தவித அரசு அனுமதியுமின்றி அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் ஆதனூர் காளியம்மன் கோயில்தெரு பன்னீர்செல்வம் மகன் தமிழ்வேந்தன் (32) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்த ஒன்பது மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கும்பகோணம் அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: