கீழப்பாவூர் அங்கன்வாடி மையத்துக்கு ‘டிவி’ சேர்மன் ராஜன் வழங்கினார்

பாவூர்சத்திரம், செப்.18: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கீழப்பாவூர் பேரூராட்சி குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்துக்கு டிவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் முத்து அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார். பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் தனது சொந்த செலவில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு நாற்காலிகள், அலமாரி, டிவி போன்றவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் இசக்கிமுத்து, வார்டு செயலாளர் சுடர்ராஜ், மாடசாமி, சுடலையாண்டி, இசக்கிமணி, இசக்கிராஜ், சுரேஷ்,மாயாண்டி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கீழப்பாவூர் அங்கன்வாடி மையத்துக்கு ‘டிவி’ சேர்மன் ராஜன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: