காஞ்சிபுரம் மாவட்டத்தில் போராட்டங்களுக்கு தடை; எஸ்பி சுதாகர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த எஸ்பி சுதாகர் தடை விதித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மத தலைவர்களின் பிறந்த, நினைவு நாட்கள், தொடர்ந்து வரவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், அரசியல் கட்சியினர், சாதி மற்றும் மத அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது. இச்சமயங்களில் இருபிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம்,  ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் 15 நாட்களுக்கு காவல் சட்டம் 30 (அ) அமல்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தின்படி, ஒரு கூட்டத்தை கூட்டவோ, பேரணி நடத்தவோ, அமைதியை சீர்குலைக்கும் வகையில் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிளை நடத்த காவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெறவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் போராட்டங்களுக்கு தடை; எஸ்பி சுதாகர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: