கல்லூரி பேராசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி

பட்டிவீரன்பட்டி, மே 10: பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துகணேஷ்(31). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். பட்டிவீரன்பட்டியில் உள்ள யாழினிநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த வேலையாக முத்துகணேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவில் சென்னையிலிருந்து கிளம்பி பட்டிவீரன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் வந்துள்ளார். அப்போது இவரது கார் சத்தம் கேட்டு முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி சென்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த முத்துகணேஷ் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவை, திருடன் உடைக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் முகமூடி அணிந்த திருடன் நடந்து செல்வது பதிவாகியிருந்தது. இது தொடர்பாக முத்துகணேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருடனை தேடி வருகின்றனர்.

The post கல்லூரி பேராசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: