கல்லணை அருகே மாணவியை கன்னத்தில் அடித்து மிரட்டியவர் கைது

 

திருக்காட்டுப்பள்ளி, செப். 16: கல்லணை அருகே ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியை கன்னத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்த வரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே கல்லணை அகரப்பேட்டையில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இப்பள்ளிக்குள் சென்று அங்கு படிக்கும் மாணவி ஒருவரை அகர பேட்டை கள்ளத்தெருவை சேர்ந்த சங்கர் மகன் ராம்குமார் (20) என்பவர் கன்ன த்தில் அடித்து வெளியில் வந்தால் கொலை செய்துவிடு வேன் என்று மிரட்டல் விடு த்ததாக தெரிகிறது.பள்ளி தலைமை ஆசிரியர் வினோதகன் புகார் பேரில் ராம்குமாரை தோகூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லணை அருகே மாணவியை கன்னத்தில் அடித்து மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: