கலெக்டர் அலுவலகத்தில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர்கூட்டம்

 

திருச்சி, ஆக.24: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 30ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நோிலோ, மனுக்கள் மூலமாகவோ தொிவிக்கலாம். இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகளை கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

The post கலெக்டர் அலுவலகத்தில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: