கறம்பக்குடி பகுதிகளில் தைல மரக்காடு தீயில் எரிந்து சேதம்

கறம்பக்குடி, ஜூலை 31: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இலைகடி விடுதி, கொங்கரக்கோட்டை, கல்லாக்கோட்டை போன்ற கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சாலை ஓரங்களில் அமைந்துள்ள தைல மரக்காடுகளில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மூன்று இடங்களில் வெவ்வேறு நேரங்களில் எரிந்த தீயை கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தனர்.

The post கறம்பக்குடி பகுதிகளில் தைல மரக்காடு தீயில் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: