கரைவெட்டி பகுதியில் மணல் கடத்திய 5 டூவீலர்கள் பறிமுதல்

 

அரியலூர், ஜூன் 7: அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கரைவெட்டி பகுதியில் வெங்கனூர் காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்னிமங்கலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி சிமெண்ட் சாக்குகளில் மணல் அள்ளிக்கொண்டு, கரைவெட்டி கிராமத்துக்கு சென்ற 5 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் மறித்தனர்.

அப்போது, காவல் துறையினரை கண்ட 5 நபர்களும் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரங்களில் போட்டு விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து 5 இருசக்கர வாகனங்கள், ஒரு வாகனத்துக்கு 5 என்ற எண்ணிக்கையில் 25 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

The post கரைவெட்டி பகுதியில் மணல் கடத்திய 5 டூவீலர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: