வேலூர் : ஜிஎஸ்டி அமலான பிறகு மருந்துகள் விலை உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1500 மருத்துவர் பணியிடங்கள் மற்றும் 2 ஆயிரம் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழக மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை. கடந்த ஆண்டு மட்டும் ரூ500 கோடிக்கு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மருந்துகள் விலை சற்று அதிகரித்திருப்பது உண்மையே. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு மருந்துகள் விலை சற்று உயர்ந்துள்ளது.