சென்செக்ஸ் 80000, நிப்டி 24300 புள்ளி கடந்து சாதனை..!!

மும்பை: வங்கி, உலோகத் துறை பங்குகள் விலை உயர்வால் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.6%-க்கு மேல் உயர்ந்து புதிய உச்சமடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 632.85 புள்ளிகள் உயர்ந்து 80,074 புள்ளிகளை தொட்டு புதிய உச்சமடைந்துள்ளது. வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 545 புள்ளிகள் உயர்ந்து 79,987 புள்ளிகளில் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 185 புள்ளிகள் உயர்ந்து 24,309 புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

 

The post சென்செக்ஸ் 80000, நிப்டி 24300 புள்ளி கடந்து சாதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: