ஒன்றிய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 7: புதிதாக மூன்று சட்டங்களை உருவாக்கியுள்ள ஒன்றிய அரசை கண்டித்து, எஸ்டிபிஐ சார்பில் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய அரசின் 3 புதிய சட்டங்களை எதிர்த்தும், அவற்றை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை, அண்ணா நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பிலால்தீன், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், பொதுச் செயலாளர் சாகுல்ஹமீது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: