ஒட்டன்சத்திரம் தொகுதியில் மரகத பூஞ்சோலை முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்

ஒட்டன்சத்திரம், ஆக. 15: அரசு நிலங்களில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக உருவாக்கப்பட்ட மரகத பூஞ்சோலைகளை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட இடையகோட்டை, கள்ளிமந்தயம் பகுதிகளில் மரகத பூஞ்சோலைகள் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், உதவி வன பாதுகாவலர் வேலுமணி நிர்மலா, வனச்சரகர் ராஜா, வனவர் இளங்கோவன், தொப்பம்பட்டி ஒன்றிய துணை தலைவர் தங்கம், கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், அவை தலைவர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் கணேசன், சரவணன், துணை தலைவர் ராஜேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் வனத்துறையினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் தொகுதியில் மரகத பூஞ்சோலை முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: