உலக நன்மை வேண்டி சிந்தாமணி ஸ்ரீமாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

 

தா.பழூர், ஜூலை 31: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நேற்று விநாயகருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை மதுரை வீரனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் வழிபாடு நடைபெற்று மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஸ்ரீ மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், மஞ்சள், மாப்பொடி, இளநீர், கரும்பு சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தால். இதனை தொடர்ந்து மகா தீர தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். உலக நன்மை வேண்டியும், குடும்ப நலம் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும்பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

The post உலக நன்மை வேண்டி சிந்தாமணி ஸ்ரீமாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: