இன்று மாலை ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரை

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை, நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையை ஆற்ற உள்ளார். சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு, கடந்த மாதம் 25ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார். நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு முர்மு இன்று மாலை 7 மணிக்கு உரையாற்ற உள்ளார். தூர்தர்ஷனில் இது நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. அகில இந்திய வானொலியும் ஒலிபரப்புகிறது. அதன் பிறகு, இரவு 9 மணிக்கு அந்தந்த மாநில மொழிகளில் இவருடைய உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. ஜனாதிபதியாக முர்மு பதவியேற்ற பிறகு, நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் முதல் உரை இதுதான்….

The post இன்று மாலை ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரை appeared first on Dinakaran.

Related Stories: