இந்தியா இந்தியாவில் 553 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் 5% கீழ் குறைந்துள்ளது!: ஒன்றிய அரசு தகவல்..!! Jun 22, 2021 தில்லி இந்தியா யூனியன் அரசு ஒன்றிய அரசு தகவல் தின மலர் டெல்லி: இந்தியாவில் 553 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இத்தகவலை தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தை விட சராசரியாக தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 29 சதவீதமாக குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் நாடு முழுவதும் 88 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 88 லட்சம் தடுப்பூசிகளில் 63.68 சதவீத தடுப்பூசிகள் கிராமப்புற மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக மத்தியப்பிரதேசத்தில் 17 லட்சம் பேருக்கும், கர்நாடகத்தில் 11 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் உத்திரப்பிரதேசத்தில் 7 லட்சம், பீகாரில் 5.7 லட்சம், அரியானா, குஜராத்தில் 5.15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,99,77,861 ஆக உயர்ந்தது. இதேபோல் புதிதாக 1,167 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,89,302 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. … The post இந்தியாவில் 553 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் 5% கீழ் குறைந்துள்ளது!: ஒன்றிய அரசு தகவல்..!! appeared first on Dinakaran.
ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்
வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஆணை
ஜம்மு அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் 10 பயணிகள் காயம்
உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!