நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வளப்பூர்நாட்டில், நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், அண்ணன், தம்பியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். நரபலிக்காக இரட்டைக் கொலை நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு அருகே உள்ள ஆலவாய்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி(48). இவரது சகோதரர் ரங்கன்(45). இருவரும் விவசாயம் செய்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(40). இவர்கள் 3 பேர் இடையே, கடந்த ஓராண்டாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை, வளப்பூர்நாட்டில் உள்ள சுடுகாட்டில் முத்துசாமி, ஸ்ரீரங்கன் ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.
இதுகுறித்த கொல்லிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.