ஆலத்தூர் ஒன்றிய குழு கூட்டம்

 

பாடாலூர், மார்ச் 1: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, பொது நிதிகளில் பணிகள் தேர்வு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது. மேலும் அனைத்து வார்டுகளிலும் குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) மாணிக்கம் வரவேற்றார். முடிவில் உதவியாளர் தீபா நன்றி கூறினார்.

The post ஆலத்தூர் ஒன்றிய குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: