அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

அரியலூர்,ஆக.14: அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை (15ம்தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு:
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாளை (15ம்தேதி) ஒருநாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை மூடல் appeared first on Dinakaran.

Related Stories: