புதுடெல்லி: இரண்டு மாதங்களுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகின்றது. எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துவதும் அதன் காரணமாக பதற்றம் ஏற்படுவதும் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் எல்லையில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.