அரசு பள்ளியில் குறுவட்ட விளையாட்டு போட்டி

வேதாரண்யம், ஆக.13: வேதாரண்யம் அரசு பள்ளியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது.
வேதாரண்யம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தேத்தாகுடி எஸ்கே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முதற்கட்டமாக சதுரங்கபோட்டி தொடங்கியது. வேதாரண்யம் வட்டாரத்தைச் சார்ந்த 32 பள்ளிகளில் இருந்து 202 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

நான்கு நிலைகளில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பின்னர் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்பார்கள். சதுரங்க போட்டியை தேத்தாகுடி எஸ்கே அரசு மேல்நிலைபள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்கே வேதரெத்தினம், பொருளாளர் சண்முகம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

The post அரசு பள்ளியில் குறுவட்ட விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: