அரசு துவக்க பள்ளியில் கலை திருவிழா போட்டி

 

தொண்டி,செப்.11: தொண்டி அரசு கிழக்கு துவக்க பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. ஆர்வமுடன் மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் அனைத்துப் பள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடப் போட்டி, கதை சொல்லுதல், ஆடல் பாடல் என ஏராளமான போட்டிகள் நடத்தப்படுகிறது. தொண்டி கிழக்கு அரசு துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையில் நடைபெற்ற போட்டியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பிணர்களும் சக ஆசிரியர்களும் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

The post அரசு துவக்க பள்ளியில் கலை திருவிழா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: