எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி தவெக அராஜகம் – திமுக எம்பி வில்சன் குற்றச்சாட்டு

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவறாக எதுவும் பேசவில்லை என்பதையே உயர்நீதிமன்ற உத்தரவு காட்டுவதாக திமுக எம்.பியும், வழக்கறிஞருமான வில்சன் கூறி உள்ளார். விசாரணைக்கு பின் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பொய் பிரச்சாரத்தில் தவெக அரசு இறங்கியுள்ளதாக வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்கு பின் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள வில்சன், எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கும் நோக்கில் திட்டமிட்டுப் பொய்யான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

யார் அரசை எதிர்த்து பேசினாலும் உடனடியாக அவர்களது கட்சியினரை வைத்து பொய் வழக்கு தாக்கல் செய்து, கைது செய்யும் படலத்தில் இறங்கி விடுகிறார்கள். இது தவெக மற்றும் காவல்துறையின் அராஜக போக்கையே

Related Stories: