தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து விரைவில் கொள்கை முடிவு எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கக் கோரி நவீன் குமார் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்குவது குறித்து குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
