காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையின் 11 நீர்மட்டம் 2 நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயரந்துள்ளது. 8,000 முதல் 10,000 கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
