மதுரை: மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மினி பேருந்து ஓட்டுநர்கள் மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. மாட்டுத்தாவணியில் அரசு பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் மினி பேருந்துகளையும் இயக்க அனுமதிக்கக் கோரி மறியலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மினி பேருந்து ஓட்டுநர்கள் மறியலை கைவிட்டனர்.
